×

அசாம் மாநிலத்தில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு: 27 பேர் படுகாயம்


அசாம்: அசாம் மாநிலம் கொலாகாட் மாவட்டத்தில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். பலிஜான் என்ற இடத்தில் இன்று அதிகாலை நேரிட்ட விபத்தில் படுகாயமடைந்த 27 பேர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோலாகாட்டில் உள்ள டெர்கான் அருகே உள்ள பாலிஜன் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் விபத்து நடந்தது. காயமடைந்த பயணிகளில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் நிர்வாக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

கோலாகாட் மாவட்டத்தில் உள்ள டெர்கான் அருகே உள்ள பாலிஜான் கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தின் போது, ​​அதிகாலை 3 மணியளவில் போகிபீல் சுற்றுலாவிற்கு அட்டகேலியாவில் இருந்து புறப்பட்ட பேருந்தில் 45 பேர் இருந்தனர். இதற்கிடையில், அதிகாலை 5 மணியளவில், மார்கெரிட்டாவிலிருந்து வந்த நிலக்கரி லாரி பேருந்து மீது மோதியது. விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை ஜேஎம்சிஎச் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், பல பயணிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் பர்லுகுவா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். டின்சுகியாவில் உள்ள திலங்கா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து போகிபீலுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அப்போது இந்த விபத்து நடந்துள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்படும் ஏன்று தெரிவித்துள்ளனர்.

 

The post அசாம் மாநிலத்தில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு: 27 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Assam ,Kolaghat district ,Balijan ,Tercon ,Collagat ,Dinakaran ,
× RELATED அமித்ஷா தொடர்பான போலி வீடியோ: ஒருவர் கைது